states

ஆயுதமேந்திய பாஜக ஆதரவு மதவெறிக் குழுக்களே மணிப்பூரில் வன்முறை நீடிப்பதற்கு காரணம்!

பழங்குடியினர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டு

இம்பால், ஜூன் 16 - குக்கி பழங்குடியினரை அழித்தொழிக்கும் கொள்கையை, ஒன்றிய - மாநில ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள்ளதாகவும், மணிப்பூரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு, ஆயுதமேந்திய பாஜக ஆதரவுக் குழுக்களே காரணம் என்றும் மணிப்பூர் பழங்குடியினர் தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே, ஒன்றிய அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்பாமல், குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கு ராணுவத்தின் மூலம் பாதுகாப்பளிப்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ‘மெய்டெய்’ சமூகத்தினருக்கும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினர் சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, 40 நாட்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. மே 3-ஆம் தேதி முதல் தற்போது வரை 105 பேர்  பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள்,  நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.  வன்முறையில் பாதிக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் பேர், 349 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 20 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், வன்முறை குறைந்தபாடாக இல்லை.

இந்நிலையில்தான், வியாழக்கிழமை யன்றும் வன்முறைகள் அரங்கேறியுள்ளன. குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு மணிப்பூரின் காமென்லோக் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர்.  இதற்கு பதிலடியாக குக்கி சமூகத்தை சேர்ந்த மாநில அமைச்சர் நெம்சாவின் இம்பால் நகர வீட்டை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இம்பாலின் நியூ செக்கான் பகுதியில்  உள்ள குக்கி சமூகத்தவரின் வீடுகளுக்கும் வியாழனன்று தீ வைத்தனர். வன்முறையைத் தடுக்கும் வகையில் அதிரடிப்படையினர் அங்கு  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் போராட்டக் காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள, ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே. ரஞ்சன் சிங்கின் வீடு, புதனன்று பின்னிரவில் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது. அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 9 பேர், பாதுகாப்பு வீரர்கள் 5 பேர், கூடுதல் பாதுகாப்பு வீரர்கள் 8 பேர்  மொத்தம் 22 பேர் பாதுகாப்புப் பணியில் இருந்தும் தாக்குதலைத் தடுக்கமுடியவில்லை. வன்முறைகள் தொடர்பாக பாஜக முதல்வர் என். பைரேன் சிங், வியாழ னன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், “நாங்கள் வன்முறையை  அடக்குவதில் உறுதியாக உள்ளோம். பல்வேறு கட்டங்களாக பல தரப்பினரு டனும் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆளுநர் தலைமையில் அமைதிக் குழுவும்  அமைக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களு டனான ஆலோசனை விரைவில் தொடங்கும்.  வெகு சீக்கிரமாக அமைதியை நிலைநாட்டு வோம். உடனடியாக நிலைமை சீராவது கடினம்தான். ஆனால் மாநிலத்தில் வன்முறைகள் குறைந்து வருகின்றன. வன்முறையாளர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மெய்டெய் - குக்கி சமூகத்தவர் இடையே மோதல் இல்லை

இந்நிலையில்தான், ‘மணிப்பூரில் குக்கி பழங்குடியினரை ‘இன அழிப்பு’ செய்யும் கொள்கையை ஒன்றிய அரசும், மாநில  முதல்வர் பைரேன் சிங்கும் பின்பற்றி வருகின்றனா்’ என்று மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பு (Tribal Forum) உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால விண்ணப்ப மனுவில் புகாா் தெரிவித்துள்ளது.  அந்த மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மாநிலத்தில் பெரும்பான்மை மெய்டெய் சமூகத்தினரும், குக்கி பழங்குடியின சமூகத்தினரும் நீண்ட காலமாக வாழ்ந்து  வரும் நிலையில், இந்த இரு சமூகத்தினரி டையே மோதல் நிலவி வருவதாக கூறப்படுவது  உண்மைக்கு மாறானது. இரு சமூகத்தினரி டையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு கள் இருந்தபோதிலும், நீண்ட காலமாக மாநி லத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றோம் என்ற விஷயத்தையே இத்தகையச் செய்திகள் மறைக்கப் பாா்க்கின்றன. மேலும், மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள கட்சிக்குத் தொடா்புடைய 2 ஆயுதமேந்திய வகுப்புவாத குழுக்கள், பழங்குடியினர் சமூகத்தினா் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்திவரும் சூழல் இப்போது உருவெடுத்துள்ளது.

இதற்கு முன்பாக, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே 17-ஆம் தேதி விசாரிக்கப்பட்டபோது, ‘பிரச்சனைக்கு உரிய முறையில் தீா்வு காணப்படும்’ என்று ஒன்றிய அரசு சாா்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட பிறகும் குக்கி பழங்குடியினத்தைச் சோ்ந்த 81 போ் கொல்லப்பட்டிருக்கின்றனா். 31 ஆயிரத்து 410 போ் வேறு இடங்களுக்கு குடிபெயா்ந்திருக்கின்றனா். குக்கி பழங்குடி யினரை ‘இன அழிப்பு’ செய்யும் கொள்கை யை ஒன்றிய அரசும், மாநில முதல்வரும் பின்பற்றி வருகின்றனா். எனவே, ஒன்றிய அரசின் ‘வெற்று வாக்குறுதி களை’ நம்பாமல், குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கு ராணுவத்தின் மூலமாக உரிய பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அளிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த அசாம் மாநில முன்னாள் காவல்துறைத் தலைவா் ஹரேகிருஷ்ண தேகா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும் என்பதோடு, வன்முறையில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு 3 மாதங்களுக்குள் தலா ரூ. 2 கோடி இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.